சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பாதுகாப்பு வழங்கப்படுகின்ற சிறுவர்களை சமூகமயப்படுத்தும் போது திருமண எதிர்பார்ப்புடன் இருக்கின்ற இளைஞர் யுவதிகள், அதற்கான முறையான வகையில் தயார்படுத்தும் நோக்கில் நிரந்தரமானதும் பாதுகாப்பானதுமான வீடொன்றை அமைப்பதற்கு இயலுமாகும் வகையில் 01 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய..
• 18 வயது பூர்த்தியடைந்தமையின் அடிப்படையில் கடந்த 10 வருட காலத்தில் (2015.06.30 திகதிக்கு) பின்னர் நிறுவன ரீதியான பாதுகாப்பிலிருந்து விடுபட்டு திருமணமாகியிருக்கின்ற அல்லது திருமண எதிர்பார்ப்புடன் இருக்கின்ற ஆனாலும் நிரந்தரமான பாதுகாப்பான வீடொன்று இல்லாத இளைஞர் யுவதிகள்
• தகுந்த குடும்பப் பின்னணி அல்லது வாழ்வாதாரம் இன்மையால் தொடர்ந்தும் சிறுவர் இல்லங்களில் தங்கியிருக்கின்ற 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர் யுவதிகள் (விசேடமாக பெண்கள்)
ஆகியோர் இந்தத் திட்டத்தின் மூலம் சலுகைகளைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.


