இலங்கை தேசிய முன்கூட்டிய நடவடிக்கை வழிக்காட்டி 2026-2030 பாதுகாப்புச் செயலாளரின் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது
இலங்கை தேசிய முன்கூட்டிய நடவடிக்கை வழிக்காட்டி 2026-2030 பாதுகாப்புச் செயலாளரின் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது
இலங்கையில் அனர்த்த முன்னெச்சரிக்கை மற்றும் காலநிலைத் தாங்குதிறனை முன்கூட்டிய நடவடிக்கைகள் மூலம் வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட “இலங்கை தேசிய முன்கூட்டிய நடவடிக்கை வழிக்காட்டி 2026-2030” (Sri Lanka National Anticipatory Action Roadmap 2026–2030) இன்று (04 ஜூன்) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம கலந்துக் கலந்துக் கொண்ட பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவுக்கு (ஓய்வு), அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) ஆயத்தநிலை மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் திரு. சதுர லியனாராச்சி வழிக்காட்டியின் முதல் பிரதியை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.


