இலங்கைக்கான ஓமான் தூதுவர் அஹமட் அலி சயித் அல் ரஷ்தி மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இரு நாடுகளுக்குமிடையிலான கடற்றொழில் துறைசார் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, முதலீட்டு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கான புதிய வாய்ப்புகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
அத்துடன், ஓமானில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்களுக்கான ஆதரவுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார். எதிர்காலத்தில் இருநாடுகளுக்குமிடையிலான கூட்டு முயற்சிகளை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது உடன்பாடு எட்டப்பட்டது.u


