பாதுகாப்பு அமைச்சில் உள் விவகாரப் பிரிவு திறந்து வைப்பு

பாதுகாப்பு அமைச்சில் உள் விவகாரப் பிரிவு திறந்து வைப்பு
  • :

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி செயலக சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களின்படி, அரச நிறுவனங்களில் சேவைகளை வழங்குவது தொடர்பான விசாரணைகள் மற்றும் புகார்களைப் பெறுவதற்காக அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ளக விவகாரப் பிரிவுகளை நிறுவுதல் இப்போது தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஒரு உள் விவகாரப் பிரிவை (IAU) நிறுவும் நிகழ்வு இன்று (மே 20) பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.

இத்தகைய ஒரு பிரிவை நிறுவுவதன் முதன்மை நோக்கம் ஊழலைக் குறைப்பதும், நிறுவனங்களுக்குள் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதுமாகும். இது ஊழல் அபாயங்களைக் கண்டறிதல், அபாயங்களை மதிப்பிடுதல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்துதல் போன்ற விடயங்களைக் கண்காணிக்கும். முழு செயல்முறை பற்றிய முழுமையான அறிக்கையை ஆண்டுதோறும் ஜனாதிபதி செயலகம் மற்றும் லஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்தப் பிரிவின் ஆரம்ப விழாவில் பங்கேற்ற பாதுகாப்புச் செயலாளர், இந்தத் திட்டத்தை முறையாக செயல்படுத்துவதன் மூலம் அடையக்கூடிய நன்மைகள் குறித்து தெளிவுபடுத்தினார்.

இந்த திட்டத்திம் தொடர்பில் அறிமுக விளக்கத்தை திருமதி பிரியங்கனி ஹெவாரத்ன வழங்கினார். இந்த நிகழ்வில் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திட்டமிடல் பணிப்பாளர் நாயகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]