நாடு முழுவதும் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது.

நாடு முழுவதும் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது.
  • :

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.

2025 மே மாதம் 21 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2025 மே மாதம் 21 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

நாடு முழுவதும் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மாத்தறை, புத்தளம், நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமத்திய மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்திலும், அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகலில அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப்பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கி.மீ வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்றும் வீசக்கூடும்.

இடியுடன்கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]