பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் யுனிசெஃப் (UNICEF) நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று டிசம்பர் 10ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
புதிய கல்விச் சீர்திருத்தத்திற்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், கல்வி நிர்வாகக் கட்டமைப்பு, பாடத்திட்டம், ஆசிரியர் பயிற்சி உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கும் வகையில் டிஜிட்டல்மயமாக்கல் கொள்கையொன்றைத் தயாரித்தல் மற்றும் அனைத்துப் பாடசாலைகளையும் ஒருங்கிணைப்பதற்காக டிஜிட்டல்மயமாக்கலைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.


