பொலன்னறுவை மாவட்டத்தில் பயிரிடப்படாத நிலங்களில் பயிரிடுவதற்கு நடவடிக்கை

  • :

நாட்டில் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பயிரிடப்படாத நிலங்களில் பயிரிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ள நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி பொலன்னறுவை மாவட்டத்தில் விவசாய நிலங்களில் பயிரிடுவதற்கான உத்தேச வேலைத் திட்டத்தின் கீழ் மெதிரிகிரிய அக்பர் பிரதேசத்தில் செய்தி பண்ணப்படாத இடங்களில் பயிரிடுவதற்காக தென்னங் கன்றுகளை வழங்கும் நிகழ்வு நேற்று (11) இடம்பெற்றது.

அவ்வாறே கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்கு சொந்தமான 2000 ஏக்கர் நிலத்தில் சோளம் உற்பத்திக்கான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவசாயத் திணைக்களம் உட்பட அரச தரப்பின் தலையீட்டுடன் இத்திட்டம் பொலன்னறுவை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது பொலன்னறுவை மாவட்டத்தில் பலன் தரும் பயிர்கள் செய்கை பண்ணப்படாத 1,723 ஏக்கர் மற்றும் 126 ஏக்கர் வயல் நிலங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]