இந்த ஆண்டுக்கான பொசன் பௌர்ணமி தினத்தை, பூரண அரச அனுசரணையுடன் நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மிஹிந்தலை ரஜ மகா விஹாரையின் பிரதம விகாராதிபதி வணக்கத்திற்குரிய வளவாஹெங்குன வெவே தம்மரதன நாயக்க தேரர், நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ஜூன் மாதம் 10 ஆம் திகதி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் அரச பொசன் விழா உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அனுராதபுரம் மாவட்ட ஊடகப் பிரிவு