இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஆலோசகர் (DA) லெப்டினன்ட் கேர்ணல் மத்திவ் ஹவுஸ் (Lieutenant Colonel Matthew House) நேற்று (ஜூன் 18) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
லெப்டினன்ட் கேணல் ஹவுஸை பிரதி அமைச்சர் அன்புடன் வரவேற்றது டன் அவருடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்த இந்த சந்திப்பு ஒரு வாய்ப்பாக அமைந்தது.
இதேவேளை, நாடு திரும்பவுள்ள முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் அந்தோனி சி நெல்சனும் (Lieutenant Colonel Anthony C. Nelson) இதன் போது சமூகமளித்திருந்தார். அவர் புதிய பாதுகாப்பு ஆலோசகரை பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு அறிமுகம் செய்து வைத்ததுடன், தனது சேவை காலத்தின் போது வழங்கப்பட்ட ஆதரவிற்கு பிரதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவதில் லெப்டினன்ட் கேர்ணல் நெல்சனின் (Lieutenant Colonel Nelson) பங்களிப்புகளை பிரதி அமைச்சர் பாராட்டினார். அத்துடன் வெற்றிகரமான பதவிக்காலத்திற்காக லெப்டினன்ட் கேர்ணல் ஹவுஸ்க்கு (Lieutenant Colonel House) தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இரு நாடுகளின் பரஸ்பர உறுதிப்பாட்டை இந்த சந்திப்பு அடிக்கோடிட்டுக் காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.