இலங்கைக்கான வியட்நாம் சோசலிச குடியரசின் தூதுவர் மேதகு Mrs. Trinh Thi Tam, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (ஜூன் 18) பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, பாதுகாப்பு செயலாளரும் வியட்நாம் தூதரும் இரு நாடுகளுக்கிடையிலுமான நீண்டகால இருதரப்பு உறவுகளின் முக்கிய அம்சங்கள் குறித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதன்போது பிரமுகர்களும் புத்த மதத்தின் மூலம் இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான ஆழமான வேரூன்றிய தொடர்புகளை குறிப்பிட்டு பகிரப்பட்ட கலாச்சார மற்றும் மத பாரம்பரிய அம்சங்கள் தொடர்பில் முக்கியத்துவமிக்க விடையங்கள் குறித்து கலந்துரையாடினர்.
மேலும், இக் கலந்துரையாடல் பல்வேறு துறைகளில் இராஜதந்திர ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கும் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்கும் இரு நாடுகளின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தியது.
வியட்நாமிய தூதரின் வருகைக்கு பாதுகாப்புச் செயலாளர் நன்றி தெரிவித்ததோடு, இருதரப்பு நலனுக்காக வியட்நாமுடன் நட்புறவைத் தொடர்ந்து வளர்ப்பதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டையம் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.