கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் போக்குவரத்து நலன்புரி சங்கத்தினால் ஐந்தாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வு, 2025 ஆகஸ்ட் 20 ஆம் திகதி கல்வி அமைச்சில் இடம்பெற்றது.
பிரதமர், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தலைமையில் மற்றும் கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, மற்றும் கல்விச் செயலாளரின் பங்கு பற்றுதலுடன் ஸ்ரீ ஜயவர்த்தனபுர மற்றும் அபேக்ஷா வைத்தியசாலைகளுக்குத் தேவையான இரத்த தானம் வழங்குவதே இந்நிகழ்வின் பிரதான நோக்கமாகும்.


