திட்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட புத்தளம் பாதையில் பயணிகள் ரயில் சேவைகள் பல கட்டங்களாக நீர்கொழும்பு, கொச்சிக்கடை, நாத்தண்டியா மற்றும் குடாவெவ ரயில் நிலையங்களுக்கு நீட்டிக்கப்பட்டன, கடைசியாக 2025.12.29 ஆம் திகதி சிலாபம் ரயில் நிலையம் வரை ரயில் சேவைகள் நீடிக்கப்பட்டன.
கடுமையான பேரழிவால் சேதமடைந்த காரணத்தினால் சிலாபம் ரயில் நிலையத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த இந்தப் பாதையின் ரயில் சேவைகள், சேதமடைந்த இடங்கள் புணரமைக்கப்பட்ட பின்னர் 2026.02.16 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டையிலிருந்து புத்தளம் வரையிலான ரயில் சேவைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, புத்தளம் ரயில் பாதை முழுமையாக திறக்கப்படும் மற்றும் பயணிகள் ரயில் சேவைகள் பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளன.



