வரையறுக்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையயாளர் (நிதி) மற்றும் வர்த்தகர் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது

வரையறுக்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையயாளர் (நிதி) மற்றும் வர்த்தகர் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது
  • :

வரையறுக்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையயாளர் (நிதி) மற்றும் வர்த்தகர் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

 

ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறப்பட்ட முறைப்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பில், வரையறுக்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் நோக்கில், ஒரு கிலோ பூண்டை ரூபா 135/- விலையில் ஒரு தனியார் தரப்பினருக்கு 54860 கிலோ பூண்டை விற்றதன் மூலம் ரூபா 17,006,600 /- இழப்பினை நிறுவனத்திற்கு ஏற்படுதியமை, அதற்கு உதவி ஒத்தாசை புரிதல் மற்றும் சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையயாளர் (நிதி) மற்றும் இரு வர்த்தகர்கள் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் 2026.02.12 அன்று காலை முறையே 9.00 மணி மற்றும் காலை 9.14 மணிக்கு மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

 

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles