விஞ்ஞானம் மற்றும் கலை ஆகியன சந்திக்கும் தருணத்தைக் காண ஒன்றிணையுங்கள்

விஞ்ஞானம் மற்றும் கலை ஆகியன சந்திக்கும் தருணத்தைக் காண ஒன்றிணையுங்கள்
  • :
 
2025 ஆம் விஞ்ஞான வாரத்தை முன்னிட்டு, 06 ஆம் வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான பாடசாலை மாணவர்களுக்காக இன்று (14) காலை பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் (Waters Edge) வளாகத்தில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சினால் விசேட நிகழ்ச்சித் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 “விஞ்ஞானம் மற்றும் கலையின் சந்திப்பு"- காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.15 மணி வரை நடைபெறும், இதில் இசை வாத்தியங்களின் விஞ்ஞான பின்னணி, விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட அற்புதமான மாயாஜால நிகழ்ச்சி, இசை மற்றும் இயற்கையின் தொழில்நுட்ப தொடர்பு, மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி மாற்றங்கள் மற்றும் சேமிப்புத் தொழில்நுட்பம் தொடர்பான செயன்முறைப் பயிற்சிப் பட்டறை,அறிவியல் தகவல்தொடர்புக்கான பயிற்சிப் பட்டறை ஆகியவை நடைபெறும்.

Related Articles