வீட்டுத் திட்டத்திற்கான நிதி அமைச்சரவையினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு

வீட்டுத் திட்டத்திற்கான நிதி அமைச்சரவையினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு
  • :

வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், வீடமைப்புத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (12.06.2025) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் கிராமிய அபிவிருத்தித் திட்டம், வீதி அபிவிருத்தி திட்டம், வீட்டுத் திட்டம், குடிநீர், போன்ற திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக அரசாங்க அதிபர் தலைமையில் ஆராயப்பட்டு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

மேலும், 02.06.2025 இல் அதிமேதகு சனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 6 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டிற்கான நிதி 9 இலட்சம் ரூபாவாகவும், 10 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டிற்கான நிதி 15 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்து, அந்தவகையில் 9இலட்சம் பெறுமதியான 53 வீடுகளுக்கும், 15இலட்சம் பெறுமதியான 563 வீடுகளுக்குமான நிதியுமாக மொத்தமாக மாவட்டத்திற்கு 891.30 மில்லியன் ரூபா நிதி கிடைக்கவுள்ளதாகவும், அதில் முதற்கட்டமாக 235 மில்லியன் நிதி ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து வீட்டுத் திட்ட வேலைகளை துரிதப்படுத்துமாறும் பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.

 

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]