அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் தலைமையில்...

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் தலைமையில்...
  • :

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று முன்தினம் (31) அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர, கிராமப்புற அபிவிருத்தி மற்றும் சமூக உள்கட்டமைப்பு பிரதி அமைச்சரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான வசந்த பியதிஸ்ஸ, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட செயலாளர் ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் முதல் அமர்வில், கரும்பு விவசாயிகள் அமைப்புகள், ஹிங்குராண, கல்லோயா தொழிற்சாலையின் முகாமைத்துவ அதிகாரசபை மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன், அம்பாறை கல்லோயா தொழிற்சாலைக்கு கரும்பு பயிரிட்டு வழங்கும் கரும்பு விவசாயிகளின் நிலப் பிரச்சினை உட்பட பல பிரச்சினைகள் குறித்து கைத்தொழில் அமைச்சர் கலந்துரையாடி உடன்பாடுகளை எட்டினர்.

பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள வளர்ச்சித் திட்டங்கள் குறித்து நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது, மேலும் தற்போதுள்ள பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

Related Articles