இலங்கை மத்திய வங்கி அதன் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் பொருட்டும், நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினைப் பாதுகாக்கும் அதேவேளையில் கடந்த காலத்தில் எதிர்கொள்ளப்பட்ட மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை கடந்து செல்வதில் இலங்கையின் வெற்றிக்கதையை எடுத்துக்காட்டும் வகையிலும் நிதியியல் உறுதிப்பாட்டு மாநாட்டை 2025 மே 23 அன்று கொழும்பில் நடாத்தியது.
பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் நிபுணத்துவம்மிக்கவர்களை ஒன்றிணைப்பதன் வாயிலாக, நிதியியல் உறுதிப்பாட்டு சவால்கள் மற்றும் கொள்கைப் பதிலிறுப்புக்கள் மீதான அனுபவங்களையும் நுண்நோக்குகளையும் பகிர்ந்துகொள்வதற்கான சிறந்த வாய்ப்பொன்றினை இம்மாநாடு வழங்கி உள்நாட்டு ஆர்வலர்களுக்கும் சர்வதேச பங்கேற்பாளர்களுக்கும் நன்மையளிக்கின்றது.
முழுவடிவம் - https://www.cbsl.gov.lk/ta/node/18605