ஒரு எளிய வளர்ச்சிப் பரிசோதனை மூலம் உங்கள் பிள்ளையின் ஆரோக்கியம் மற்றும்
போஷணை பற்றிய முக்கியமான தகவல்களை வெளிப்படுத்த முடியும்.
ஒழுங்கான வளர்ச்சிக் கண்காணிப்பு பின்வருவனவற்றைக் கண்டறிய உதவுகிறது.
- போஷணைக் குறைபாடு
- அதிக நிறை
- வளர்ச்சிப் பிரச்சினைகளுக்கான ஆபத்து.
இப் பிரச்சினைகள் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், அவற்றை நிர்வகிப்பதும் சரிசெய்வதும்
பெரும்பாலும் எளிதாகிறது. அது பிள்ளைகள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், அவர்கள்
தங்களின் முழுத்திறனை அடைவதற்கும் உதவுகிறது.
ஜூன் மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் தேசிய போசாக்கு மாதத்தை முன்னிட்டு, 5 வயதுக்குட்பட்ட
உங்கள் பிள்ளையை, உங்கள் பொதுச் சுகாதார மருத்துவ மாது நடாத்தும் வளர்ச்சிக்
கண்காணிப்பு அமர்வுக்கு அழைத்து செல்லுங்கள்.
ஒழுங்கான வளர்ச்சிக் கண்காணிப்பு உங்கள் பிள்ளை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும்,
வலிமையாகவும் வளர வழிவகுக்கிறது.
நாம் இன்று முன்னெடுக்கும் சிறு சிறு முயற்சிகளிலிருந்தே எமது பிள்ளையின் ஆரோக்கியமான
எதிர்காலம் ஆரம்பமாகிறது


