பகிடிவதையைத் தடுப்பதற்காக படையணி 

பகிடிவதையைத் தடுப்பதற்காக படையணி 
  • :

 

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதையைத் தடுப்பதற்காக விசேட படையணி ஒன்றை அமைத்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பொலிஸ், மாணவர்களின் பிரதிநிதிகள் மற்றும் சகல பிரிவுகளையும் சம்பந்தப்படுத்தி இந்த விசேட படையணியை அமைத்துள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்க ரங்கநாத் முன்வைத்த வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.

ஆண் பெண் சமூக மற்றும் சமத்துவம் தொடர்பாக மையப்படுத்தி இதற்காக விசேட யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் , தற்போதும் பகிடிவதை தொடர்பான சம்பவங்களை அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கம் பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் 24 மணி நேரமும் செயற்படுத்துவதற்கு யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெளிவு படுத்தினார்.

அதன்படி சகல பல்கலைக்கழகங்களிலும் இந்த பகிடிவதைக்கு எதிராக செயற் படையணி ஒன்று அமைக்கப்பட்டு, ஏதேனும் பகிடிவதை சம்பவமொன்று பதிவாகும் போது அந்த பகிடிவதைக்கு எதிரான படையணியினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கும் கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசியமான சுகாதார வசதிகள்,
வைத்திய ஆலோசனைகள், உளநல மருத்துவ உதவி, மற்றும் குற்றவாளிகளுக்கு சீர்திருத்தத் திட்டம் போன்றவற்றை வழங்குவதற்கு இத்திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]