1000 இளைஞர்களைதொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டமான 4ஐ செயற்றிட்டம் (4i Project)அங்குரார்ப்பண நிகழ்வு

1000 இளைஞர்களைதொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டமான 4ஐ செயற்றிட்டம் (4i Project)அங்குரார்ப்பண நிகழ்வு
  • :

1000 இளைஞர்களைதொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டமான 4ஐ செயற்றிட்டம (4 i Project) அங்குரார்ப்பண நிகழ்வானது கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹண்டுன்நெத்தி மற்றும் பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபேசிங்க ஆகியோரது பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (22.10.2025) வாட்டர்ஸ் எட்ஜ், பத்தரமுல்லையில் (waters edge battaramulla ) ஆரம்பமாகியது.

திட்டத்தின் நோக்கம் தொடர்பான விளக்கங்களை கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி J.M. திலகா ஜயசுந்தர மற்றும் பொது நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு. S. ஆலோக பண்டாரா ஆகியோரினால் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

யாழ்ப்பாண மாவட்டம் சார்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் யாழ்ப்பாண மாவட்ட 4ஐ செயற்றிட்ட(4 i Project) உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள் ,தேசிய உற்பத்தித்திறன் செயலக அதிகாரிகள் ,அரசாங்க அதிபர்கள் ,பிரதேச செயலாளர்கள் ,தேசிய உற்பத்தி திறன் செயலக அதிகாரிகள் ,சிறுதொழில் முயற்சியாளர்கள் , 4ஐ செயற்றிட்ட உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தார்கள் .
ஊடகப் பிரிவு, மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்.

Related Articles