2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீள் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், 2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க எதிர்பார்த்துள்ள, மற்றும் 2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி திகதிக்குள் விண்ணப்பிக்க முடியாமல் போன விண்ணப்பதாரர்கள், 2025.08.07 முதல் 2025.08.12 நள்ளிரவு 12.00 மணி வரை ஆன்லைன் ஊடாக தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த சலுகை காலம் எக்காரணம் கொண்டும் மீண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


