77வது சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு விசேட  போக்குவரத்து திட்டம்

77வது சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு விசேட  போக்குவரத்து திட்டம்
  • :

பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெறவுள்ள  77வது சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு விசேட  போக்குவரத்து திட்டத்தை சுதந்திர சதுக்கத்தை மையமாகக் கொண்டு செயற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு போக்குவரத்து பிரிவு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜனவரி 29, 30, 31 மற்றும் பெப்ரவரி 01, 02 ஆகிய திகதிகளில் காலை 06.00 மணி முதல் மாலை 12.00 மணி வரை ஒத்திகை பணிகள் நடைபெறும் என்பதால், இந்த போக்குவரத்து திட்டம் கொழும்பு போக்குவரத்து பிரிவால் செயற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விசேட போக்குவரத்து திட்டத்திற்கு இணங்க கருவாத்தோட்டம், விஜயராம மாவத்தை, வித்யா மாவத்தை,   பக்கமாக உள்நுழைதல், கருவாத்தோட்டம் பௌத்தாலோக மாவத்தையின் மெய்ட்லேன்ட் பிளேஸிற்கு நுழைதல், 

கருவாத்தோட்டம் ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தை, இலங்கை மன்றக் கல்லூரி வீதியின் பகுதிற்கு உள் நுழைதல், கருவாத்தோட்டம் சுதந்திர சதுக்க சுற்றுவட்டத்தின் சுதந்திர சதுக்க பகுதிக்கு நுழைதல், 

கருவாத்தோட்டம் ஹோட்டன் பிளேஸ், மெய்ட்லேன்ட் க்றஸென்ட் சந்தியில் சுதந்திர சதுக்க சுற்றுவட்டத்திற்கு நுழைதல், கருவாத்தோட்டம் ஆர். ஜி சேனாநாயக்க மாவத்டதையின் மெய்ட்லன்ட் க்றஸென்ட் ஊடாக சுதந்திரசதுக்க சுற்று வட்டத்திற்கு நுழைதல் மற்றும் கருவாத்தோட்ட சுதந்திர சதுக்க சுற்றுவட்டத்தின் ஊடாக மெய்ட்லென் க்றஸென்ட் பகுதிக்கு நுழைதல் போன்ற வீதிகளில் ஒத்திகை நடைபெறும் காலப்பகுதியில் வீதி மூடப்படுவதுடன், சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அப்பகுதிகளில் செல்லும் அரச மற்றும் தனியார் வாகனங்கள் ஒத்திகைக் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாதவாறு பயணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும்  அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]