பஹ்ரைனில் நடைபெற்ற 3வது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கயா தலுவத்த கோல்ஃப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
தனது போட்டியை வெற்றிகரமாக முடித்துவிட்டு, இன்று (27 ஆம் திகதி) இலங்கை திரும்பினார்.
விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினர்களும் கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று அவரை வரவேற்று, இலங்கைக்காக அவர் பெற்ற வெற்றிக்கு நன்றி தெரிவித்தனர்


