ஏதிட்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட கைத்தொழில் மற்றும் தொழில்களை விரைவாக மீளக்கட்டியெழுப்புவதற்காக
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு சகல வங்கிகளில் உயர் அதிகாரிகள், மத்திய வங்கியின் பிரதிகள் மற்றும் நிதி அமைச்சின் அபிவிருத்திப் பிரிவுடன் இன்று (17) விசேட சந்திப்பொன்று கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தலைமையில் நடைபெற்றது.
இதன்போது நெருக்கடிக்கு உள்ளான தொழில்களுக்காக உடனடி நிதி ஆதரவை வழங்குதல் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் சிலவற்றுக்காக இணக்கப்பாடொன்றுக்கு வந்தனர்.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு


