அரச உத்தியோகத்தர்களுக்கான மத்தியஸ்தம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

அரச உத்தியோகத்தர்களுக்கான மத்தியஸ்தம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்
  • :

அரச உத்தியோகத்தர்களுக்கான மத்தியஸ்தம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் நேற்று (28) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்ச்சித்திட்டமானது திருகோணமலை மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் அவர்களின் தலைமையில் மாவட்ட மத்தியஸ்த உத்தியோகத்தர் பு.பவானி அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

கலந்துரையாடல்கள் மூலம் பிணக்குகளை தீர்த்துக்கொள்ளப் பயன்படும் மத்தியஸ்தமுறை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வளவாளர்களாக பிரதேச செயலக மத்தியஸ்த உத்தியோகத்தர்களான ஏ.எஸ்.எம்.நிஜாம், திருமதி.றிள்வான் பாத்திமா, என்.எப்.நஸ்ரின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

இதன்போது மாவட்ட மற்றும் பிரதேச செயலக மத்தியஸ்த உத்தியோகத்தர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]