புகையிரத திணைக்களத்தின் நிலங்களில் வசிப்பவர்களுக்கான 120 வீடுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதி

புகையிரத திணைக்களத்தின் நிலங்களில் வசிப்பவர்களுக்கான 120 வீடுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதி
  • :

புகையிரத திணைக்களத்தின் நிலங்களில் வசிப்பவர்களுக்கான புதிய வீட்டுத் தொகுதி ஒன்று கொட்டாவ, மாலபல்ல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பதில் கடமையாற்றும் அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு நேற்று (28) விசேட ஆய்வு ஒன்றில் பங்கேற்று அதன் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான நிலங்களில் தற்போது வசிக்கும் குடியிருப்பாளர்களை மீள்குடியேற்றும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டுத் தொகுதியில் 120 வீடுகள் உள்ளன. நாவின்ன முதல் பாதுக்கை வரையிலான புகையிரத திணைக்களத்தின் நிலங்களில் வசித்து வந்த குடியிருப்பாளர்கள் இந்த வீட்டுத் தொகுதியில் மீள்குடியேற்றப்பட உள்ளனர்.

ஏற்கனவே பெரும்பாலான பணிகளை முடித்துள்ள இந்த திட்டத்தை விரைவாக முடித்து பொதுமக்களுக்கு கையளிக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.

ஊடகப் பிரிவு
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]