பதுளை மாவட்டம் முழுவதும் சேதமடைந்த நீர்ப்பாசனத் திட்டங்களைப் புதுப்பித்து, பெரும் போகத்திற்கு நீர் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் "அதிஷ்டானயே மஹிம" நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ், முழுமையாக அழிக்கப்பட்ட தல்தென மஹா எல திட்டத்தின் புனரமைப்புப் பணிகள் 21 நாட்கள் என்ற குறுகிய காலத்தில் முடிக்கப்பட்டு, அண்மையில் (03) வயல்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
பதுளை மாவட்டத்தின் வியலுவ பகுதியில் உள்ள முக்கிய நீர்ப்பாசனத் திட்டங்களில், தல்தென எல திட்டம் 400 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் எண்ணூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. சேதமடைந்த கால்வாய்களைப் புதுப்பித்து, பெரும்போகத்திற்கு நீர் வழங்குவதும், விவசாயத்தை மேம்படுத்துவதும் இந்த "அதிஷ்டான மஹிம" திட்டத்தின் நோக்கமாகும்.


