கண்காணிப்பினால் அறிவைப் பெற்றுக் கொள்வதே புதிய கல்வி முறையின் அத்திவாரமாகும் 

கண்காணிப்பினால் அறிவைப் பெற்றுக் கொள்வதே புதிய கல்வி முறையின் அத்திவாரமாகும் 
  • :

கல்வி செயல்முறை கண்காணிப்பின் அடிப்படையில் ஆரம்பமாகிறது என்றும், சில விடயங்களை ஏற்கனவே உள்ள அறிவின் அடிப்படையில் அவதானிக்க முடியும், சில விடயங்களை அவதானிக்க முடியாது என்றும், அந்த அனுபவங்கள் மூலம் மாணவர்கள் கற்றல் செயல்பாட்டில் ஈடுபடுகிறார்கள் என்றும், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.

 

 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (04) நடைபெற்ற விசேட ஊடக கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

 

புதிய கல்வி சீர்திருத்தத்தில் விஞ்ஞான பாடத்துடன் சம்பந்தப்பட்ட மொடியூலில் காணப்படும் பிரச்சினை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை வெளியிட்டார். 

.

பிள்ளைகளை கண்காணித்து விருத்தி செய்வதற்காக மாணவர்களின் இயலுமையை விருத்தி செய்வதற்காக இந்த மொடியூல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

இதன்போது விண்வெளியில் காணப்படும் வாயுக்களின் வகைகள் தொடர்பாக மாணவர்களுக்கு அவதானிப்பு இன்மை பிரச்சினை இல்லை என்று குறிப்பிட்ட அமைச்சர், வகுப்பறைகளில் அதனை கண்காணித்து விஞ்ஞான ரீதியாக பதில் அளிப்பதற்கு பிள்ளைகளின் அவதானிப்பின் அடிப்படையில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

ஆரம்பத்தில் விண்வெளி தொடர்பான அறிவை பயன்படுத்துவதற்கு எடுக்கும் மாணவர்கள் வகுப்பறையில் புதிய அறிவை பெற்றுக் கொள்வார்கள் என சுட்டிக்காட்டிய அவர் இந்த புதிய கல்வி முறையில் இது புதியதொரு போக்கு என்றும் குறிப்பிட்டார்.

 

பிள்ளைகள் தர்க்க ரீதியாக கல்வி கற்கும் செயற்பாட்டில் ஈடுபடுதல் இந்த புதிய போக்கு முறையின் அடிப்படையிலானது என்றும் இதன் போது மேலும் கருத்து தெரிவித்த வெளிநாட்டு அலுவலக வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் விபரித்தார்.

 

Related Articles