எதிர்காலத்தில் ஆய்வு நிதிப் பங்களிப்பை ஒரே நிறுவனத்தினால் வழங்குவதற்கு கவனம் செலுத்தப்படும் - பேராசிரியர் கிருஷாந்த அபேசேன-
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்த தேசிய விஞ்ஞான மன்றத்தின் (NSF) தற்போதைய முன்னேற்றம், எதிர்காலத் திட்டம் மற்றும் எதிர்கால சவால்கள் தொடர்பாக கண்டறிதல், சேவைகளை ஒழுங்குபடுத்துதல், நினைத்தரணி அதிகரித்தல் போன்ற நோக்கங்களுடனான விசேட முகாமைத்துவக் குழுக் கூட்டம் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிருஷாந்த அபேசேன தலைமையில் அண்மையில் தேசிய விஞ்ஞான மன்றத்தில் நடைபெற்றது.
சமூகத்தில் விஞ்ஞான அறிவை பிரபலப்படுத்துதல், விஞ்ஞான ரீதியான ஆய்வுகளுக்காக நீதி வழங்குதல் உட்பட நிறுவனத்தின் சேவைகளை மேற்கொள்ளும் விதம் மற்றும் அவற்றின் வினைத்திறனை அதிகரித்தல் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.


