உலகின் மிகப்பெரிய மகளிர் தன்னார்வ அமைப்பின் உறுப்பினரான இலங்கை மகளிர் சாரணர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "இலங்கை மகளிர் சாரணர் சங்கத்தின் ஜனாதிபதி சாரணர் விருதுகள் மற்றும் பிரதமர் சாரணர் விருது விழா" ஆகஸ்ட் 01 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்றது.
ஒரு பெண் சாரணர் பெறக்கூடிய மிக உயர்ந்த விருதான ஜனாதிபதி சாரணர் விருதை, 301 பெண் சாரணர்களுக்கும், ஒரு ரேஞ்சர் சாரணர் பெறக்கூடிய மிக உயர்ந்த விருதான பிரதமர் சாரணர் விருதை, 23 பேருக்கும் பிரதமர் வழங்கிவைத்தார்.


