இலங்கை மன்றக் கல்லூரியின் ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்குவதற்காக 2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 135 மில்லியன் ரூபாய் நிதியில் 75 மில்லியன் ரூபாய் களை மீண்டும் பொதுத் திறைசேரிக்கு வழங்கும் நிகழ்வு நேற்று (07) இடம்பெற்றது.
அதன் தலைவர் சீதா பண்டார சம்பந்தப்பட்ட காசோலையை பொதுத் திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவிடம் கையளித்தார்.
வரவு செலவுத் திட்டத்தினால் வழங்கப்பட்ட இவ்வாறு தொடர்ச்சியான செல்வதொன்று இந்த திரைச்சேரிக்கு வழங்கப்பட்டது.
இலங்கை மன்றக் கல்லூரியின் வரலாற்றில் முதல் தடவையாக இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.
இலங்கை மன்றக் கல்லூரி 2025 ஆம் ஆண்டு மொத்த வருமானமாக 416 மில்லியன் ரூபாய்களை சேகரித்திருந்ததுடன், செலவாக 340 மில்லியன் ரூபாய்கள் மாத்திரமே.
அதன்படி, 2026 மார்ச் மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற முகாமைத்துவ சபைக் கூட்டத்தில் இந்த மீதிப் பணமான 75 மில்லியன் ரூபாய்களை மீண்டும் பொதுத் திறைசேரிக்கு வழங்குவதற்கு அனுமதி கிடைத்ததாக தலைவர் கலாநிதி சீதா பண்டார தெரிவித்தார்.


