இதய சத்திர சிகிச்சை துறையின் வளர்ச்சியில் ஒரு முக்கிய முக்கிய மைல்கல்லாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்களின் அறிவுறுத்தல்களின்படி, இந்த ஆண்டு (2026) நாடு முழுவதும் உள்ள பல முக்கிய வைத்தியசாலைகளில் 16 அதிநவீன இதயம் சம்பந்தமான நோய்களை கண்டறியும் இயந்திரங்கள் இயந்திரங்களை (Cath lab - Cardiac Catheterization Laboratory) நிறுவுவதற்கான பணிகளில் சுகாதார அமைச்சு ஈடுபட்டுள்ளது.
கொழும்பு, கண்டி மற்றும் காலி ஆகிய மூன்று தேசிய வைத்தியசாலைகளிலும், மட்டக்களப்பு, இரத்தினபுரி, பதுளை, காலி, யாழ்ப்பாணம், களுபோவில, அனுராதபுரம், குருநாகல் ஆகிய போதனா வைத்தியசாலைகளிலும், திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையிலும் இந்த 16 அதிநவீன இயந்திரங்களை நிறுவுவதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு, இரத்தினபுரி, பதுளை மற்றும் காலி தேசிய வைத்தியசாலைகளில் நிறுவப்படவுள்ள நான்கு அதிநவீன இருதய சிகிச்சை இயந்திரங்களுக்குக்கான மதிப்பீட்டு செலவு 715 மில்லியன் ரூபாவாகும்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் சுகாதார மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் 03 அதிநவீன இயந்திரங்கள் நிறுவப்படவுள்ளதுடன், கண்டி தேசிய வைத்தியசாலை, யாழ்ப்பாணம் மற்றும் களுபோவில போதனா வைத்தியசாலைகளில் தலா ஒரு அதிநவீன இயந்திரத்தை நிறுவுவதற்கு 1188 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.
மேலும், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இரண்டு அதிநவீன இயந்திரங்கள், 06 அதிநவீன இயந்திரங்கள், குருநாகல், பதுளை போதனா வைத்தியசாலைகள், கண்டி தேசிய வைத்தியசாலை மற்றும் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைகளில் தலா JICA இன் அனுசரணையில் நிறுவப்படவுள்ளது.
இந்த அதிநவீன இதய இயந்திரங்கள் அனைத்தையும் நிறுவுவதற்கான திட்டத்தின் மொத்த செலவு ரூ. 3103 மில்லியன் ஆகும்.
தற்போது, கொழும்பு, கண்டி மற்றும் காலி அத்துடன் யாழ்ப்பாணம், குருநாகல் ராகம, களுத்துறை, அனுராதபுரம் ஆகிய போதனா மருத்துவமனைகளிலும், லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையிலும், பேராதனையில் உள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் மருத்துவமனையிலும், பொலன்னறுவை மாவட்ட பொது மருத்துவமனையிலும் நிறுவப்பட்டுள்ள இயந்திரங்கள் மூலம் தீவிர சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
புதிதாக 16 இயந்திரங்கள் நிறுவப்படுவதால், அத்தகைய இயந்திரங்களின் எண்ணிக்கை 26 ஆக உயரும். பிரதான அரச மருத்துவமனை அமைப்பில் இயந்திரங்களை நிறுவுவது இதய சம்பந்தமான நோயாளிகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதோடு, காத்திருப்போர் பட்டியலையும் குறைக்கும்.
தற்போதைய நோயறிதல் மற்றும் இதயப் பராமரிப்புத் திறனை விரிவுபடுத்துதல், இதய நோய்களால் ஏற்படும் இறப்புகள் மற்றும் நோய் வாய்ப்படுதலை குறைத்தல், இதய நோயாளிகளுக்கு 24 மணி நேர சேவைகளை வழங்கல், மற்றும் வருடாந்திர இதய சிகிச்சைத் திறனை இருமடங்குக்கும் மேலாக அதிகரித்தல் ஆகிய நோக்கங்களையும் அடைவது சாத்தியமாகும்.
இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு சமத்துவத்துடன் வினைத்திறனான மற்றும் திறமையான சுகாதார சேவைகளை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும். அந்த நோக்கத்தை அடிப்படையாக கொண்டு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் இந்தத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்தி வருகிறது.
இதய ஆய்வக (கேத் லேப்) இயந்திரங்கள், இதய நோய்களைக் கண்டறிவதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் பயன்படுத்தப்படும் அதிநவீன மருத்துவ தொழில்நுட்பமாகும். இந்த இயந்திரம், இதயம் சம்பந்தமான நோயைக் கண்டறிதல், இதயத் சுருக்கத்தைக் கண்டறிய ஆஞ்சியோகிராம்களைச் செய்தல், இதய செயலிழப்பு ஏற்பட்டால் அடைப்புகளை (Block) அகற்றி ஸ்டென்ட்களைப் (Stent) பொருத்துதல், மற்றும் அசாதாரண இதயத் துடிப்புகளுக்கு பேஸ்மேக்கர் (Pacemaker) போன்ற கருவிகளைப் பொருத்துதல் உள்ளிட்ட பலதரப்பட்ட சிகிச்சை களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.


