ஜனாதிபதி மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தார்

ஜனாதிபதி மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தார்
  • :

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (25) பிற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.

முதலில் மல்வத்து மகா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி, மல்வத்து மகாநாயக்க வண, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரரைச் சந்தித்து, "சிறி தலதா வழிபாடு" மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்.

பின்னர், அஸ்கிரி மகா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க வண, வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரைச் சந்தித்து, சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அஸ்கிரி பீடத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக கடமையாற்றும் வண,உருளேவத்த தம்மரக்கித நாயக்க தேரரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டதுடன், கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]