மாகாண விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் யானையுடன் இணைந்து வாழுதல் என்ற தொனிப்பொருளில் மாவட்ட விவசாயிகளுக்கான பயிற்சி செயலமர்வு ஒன்று, கிளிநொச்சி வட்டக்கச்சியில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இப் பயிற்சி செயலமர்வு நடைபெற்றது.
மாவட்ட விவசாயத்திணைக்கள பிரதிப்பணிப்பாளர் வீ.சோதிலட்சுமி தலைமையில் நடைபெற்ற பயிற்சி செயலமர்வில் வவுனியா பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறை விரிவுரையாளர் ச.விஜயமோகன் வளவாளராக கலந்து கொண்டார்.
இதன்போது யானை மனித மோதலைத்தவிர்த்தல் தொடர்பாகவும் யானை சம்மந்தப்பட்ட பல்வேறு விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டன.
குறித்த செயலமர்வில் விவசாயத்திணைக்கள உத்தியோகத்தர்கள் ,விவசாயிகள் கலந்து கொண்டனர்.


