மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை அதிகரிக்கக்கூடும்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை அதிகரிக்கக்கூடும்
  • :

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.

2025 மே மாதம் 17 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு.

2025 மே மாதம் 17 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

அடுத்த சில நாட்களுக்கு மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்கள் மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, வடமேல், வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில 75 மி.மீ.க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு (30-40) கி.மீ வரையிலான வேகத்தில் ஓரளவு பலத்தை காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]