நாட்டில் இலவச சுகாதார சேவையின் எதிர்கால முன்னேற்றத்திற்கான திட்டங்களைத் தயாரிப்பதற்காக "தேசிய சுகாதார மேம்பாட்டுக் குழு" சமீபத்தில் ஒன்று கூடியது

நாட்டில் இலவச சுகாதார சேவையின் எதிர்கால முன்னேற்றத்திற்கான திட்டங்களைத் தயாரிப்பதற்காக "தேசிய சுகாதார மேம்பாட்டுக் குழு" சமீபத்தில் ஒன்று கூடியது
  • :
நாட்டில் இலவச சுகாதார சேவையின் எதிர்கால முன்னேற்றத்திற்கான தேசிய சுகாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்குவதற்கும் வழிநடத்துவதற்கும் தேவையான முன்னேற்பாடுகளை செய்வதற்காக "தேசிய சுகாதார மேம்பாட்டுக் குழு" (NHDC), சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர், வைத்திய நிபுணர் டாக்டர் அனில் ஜாசிங்கவின் தலைமையில் இலங்கை மன்றத்தின் கேட்போர் கூடத்தில் சமீபத்தில் ஒன்று கூடியது.
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் மற்றும் பிற அமைச்சகங்கள், உலக சுகாதார அமைப்பு, ஆசிய வளர்ச்சி வங்கி, யுனிசெஃப் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள், உள்ளூர் பல்கலைக்கழகங்கள், மருத்துவ நிறுவனங்கள், அத்துடன் நாட்டின் சுகாதாரத் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அறிஞர்கள் இந்த அறிவார்ந்த சொற்பொழிவில் பங்கேற்றனர்.
 
இந்த நாட்டு மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவது, அத்துடன் எதிர்காலத்தில் நாட்டின் சுகாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் எவ்வாறு வகுக்கப்பட வேண்டும் என்பதும் இந்த அறிவார்ந்த சொற்பொழிவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கு நாட்டு மக்களுக்கு சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் எனப்படும் ஆரம்ப சுகாதாரப் பிரிவுகளை நிறுவுவது தற்போதைய அரசாங்கத்தின் ஒரு முக்கிய திட்டமாகும், மேலும் அந்தத் திட்டத்தை விரைவாகவும் செயல்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது.
 
கடந்த பட்ஜெட்டில் சுகாதாரத் துறையின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதியை சிறந்த முறையில் பயன்படுத்துவதுதொடர்பாகவும் எதிர்காலத்தில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட இருக்கும் நிதியை சிறந்த முறையில் பயன்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்த தேசிய சுகாதார மேம்பாட்டுக் குழுக் கூட்டம் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் திட்டமிடல் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டு, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் முயற்சியால் நிறுவப்பட்டது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன, மேலதிக செயலாளர்கள், துணைப் பணிப்பாளர்கள், மூத்த உதவிச் செயலாளர்கள், மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள், பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர்கள் மற்றும் மருத்துவமனை பணிப்பாளர்கள், பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அறிஞர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related Articles