2026 ஆம் ஆண்டில் இருந்து நாடு முழுவதும் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவிகளுக்கு சுகாதாரத் துவாய்களைப் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுததுள்ளது.
2024 ஆம் ஆண்டில் இருந்து கல்வி அமைச்சினால் கிராமிய, தோட்ட மற்றும் பொருளாதார ரீதியாக கஷ்டப் பிரதேசங்களில் வாழும் பாடசாலை மாணவிகளை இலக்காக வைத்து தேசிய திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை மாணவிகளுக்காக சுகாதாரத் துவாய்களை வழங்கும் திட்டம், 2026 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளை உள்ளடக்கியதாக தரம் 6 இற்கு மேற்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவிகளின் எண்ணிக்கையை நோக்கமாகக் கொண்டு நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக விசேட செலுத்தப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவிகளின் சுகாதாரம் தொடர்பாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் மற்றும் கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்தினவின் பங்குபற்றலுடன் அண்மையில் (22) இசுறுபாயவில் கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.
அதற்காக அரசாங்கத்தினால் 1.44 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் சுகாதாரத் துவாய்களைப் கொள்வனவு செய்வதற்காக மாணவிகளுக்கு வருடாந்தம் 1,440 ரூபாய் பெறுமதியான பரிசுக் கூப்பனொன்றை வழங்குவதற்கும், மாகாணக் கல்வி அலுவலகங்கள் ஊடாக அவற்றை பாடசாலைகளுக்கு பரிசுக் கூப்பன்களை பகிர்ந்தளிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


