பொலிஸாருக்கு 556 மில்லியன் ரூபாய் பெறுமதியான நவீன உபகரணங்கள்

பொலிஸாருக்கு 556 மில்லியன் ரூபாய் பெறுமதியான நவீன உபகரணங்கள்
  • :
வீதிப் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய நடவடிக்கை

 பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு இன்று (18) இலங்கை பொலிஸாருக்கு 556 மில்லியன் ரூபாய் செலவில் நவீன வேகமானி, கணினி, புகைப்படப்படபிரதி இயந்திரம் மற்றும் யுபிஎஸ் உபகரணங்களை உத்தியோகபூர்வமாக கையளித்தது.

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த புதிய உபகரணங்கள் வீதிப் பாதுகாப்பை வலுப்படுத்தும், ஆவண முகாமைத்துவம் மற்றும் விசாரணை செயல்திறனை அபிவிருத்தி செய்தல் மற்றும் பொதுச் சேவையை விரைவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பிரியந்த வீரசூரிய மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related Articles