போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகள் வெறும் காட்சி நடவடிக்கையாக இருக்க முடியாது. இதற்காக அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். மேலும், புனர்வாழ்வு செயன்முறை இன்னும் வலுவாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
கொழும்பு மாவட்டத்தில் பல்தரப்பு போதைப்பொருள் தடுப்பு, சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு தொடர்பாக ஜூலை 28 ஆந் திகதி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.


