2025 பெப்ரவரி 20ஆம் திகதிக்கான காலநிலை முன்னறிவிப்பு
2025 பெப்ரவரி 20ஆம் திகதி காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது
காலி, மாத்தறை,களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பிற்பகல் வேளையில் அல்லது இரவில் சில இடங்களில் மலை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் சில பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான காலநிலை நிலவும்.
மேற்கு, சப்ரகமுவ, மத்தி, வடமத்தி, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் பனிமூட்டத்துடனான நிலைமை காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.