2025 மார்ச் மாதம் 01 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 மார்ச் மாதம் 01 ஆம் திகதி அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வட மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் மழை பலதடைவைகள் பெய்யலாம். ஏனைய பிரதேசங்களில் மாலை வேளையில் அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கு அதிகமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடமத்தி, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 -40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம்.
இடியுடன் கூடிய மழையினால் ஏற்படக்கூடிய தற்காலிக கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.