நாட்இன் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமணடலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பரிவால் வௌியிடப்பட்டுள்ளது.
2025 ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி க்கான வானிலை முன்னறிவிப்பு
2025 ஏப்ரல் 15ஆம் திகதி காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் காலையில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.
மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கு அதிகமான கடும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
சப்ரகமுவ, மத்தி மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.