வட மாகாணத்தில் கைவிடப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்களை நவீனமயமாக்கி செயல்படுத்த திட்டம்

  • :

வட மாகாணத்தில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் கூட்டுறவு வியாபாரத்துடன் தொடர்புடைய வியாபார நிறுவனங்களை வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க ஆய்வு செய்தார்.

சுமார் 200 மில்லியன் ரூபாய் செலவில் முறையான திட்டம் இல்லாமல் கட்டப்பட்ட யாழ்ப்பாண விசேட பொருளாதார மத்திய நிலையம் ஆய்வு செய்யப்பட்டது. இந்த பொருளாதார மத்திய நிலையம், 20 கடைகளைக் கொண்டுள்ளதுடன், இதுவரை எந்தப் பயன்பாடும் இல்லாமல் கைவிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, அமைச்சரும், பிரதி அமைச்சரும் கிளிநொச்சியில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தை ஆய்வு செய்தனர்.

 40 கடைகளைக் கொண்ட கிளிநொச்சி விசேட பொருளாதார மத்திய நிலையத்தை நவீனமயமாக்கும் பணியில், நீர் வசதிகள், போக்குவரத்து வசதிகள், சுகாதார வசதிகள், வங்கி வசதிகள் போன்ற தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குதல் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பிரச்சினைகள் மற்றும் சவால்களை அடையாளம் கண்டு தீர்வுகளை வழங்குதல் ஆகியவை அடங்கும். பொருளாதார மத்திய நிலையத்தில் மூடப்பட்ட கடைகளைத் திறப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

 மேலும், 2018 ஆம் ஆண்டு 291 மில்லியன் ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்டு எந்த வகையிலும் பயன்படுத்தப்படாத வவுனியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

 இந்த வவுனியா விசேட பொருளாதார மத்திய நிலையம், ரயில் பாதைக்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. மேலும், நீர், சுகாதார வசதிகள், போக்குவரத்து வசதிகள், பாதுகாப்பு மற்றும் மின்சார அமைப்பை நவீனமயமாக்கும் பணிகளை விரைவில் முடிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

 

அதன்படி, "ஒரு வளமான நாடு - அழகான வாழ்க்கை" என்ற கருப்பொருளைப் பின்பற்றி, அவை எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில்  நவீனமயமாக்கப்பட்டு மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளது.

 

Related Articles