வீதியில் பூஜையாக மாறும் "எஹிபஸ்ஸிகோ" அமைதிக்கான நடைபயணம்

வீதியில் பூஜையாக மாறும் "எஹிபஸ்ஸிகோ" அமைதிக்கான நடைபயணம்
  • :
இது இலங்கையில் ஒரு கவர்ச்சிகரமான காட்சியாகத் தொடங்கப்பட்டிருந்தாலும், இப்போது அது வெறும் காட்சிக்கான பயணம் மட்டுமல்ல.
தற்போது இது அமைதியாகவும், படிப்படியாகவும், பாதையெங்கும் உள்ள உயிர்கள், வீடுகள் மற்றும் மக்களின் மனங்களுக்குள் ஊடுருவிச் சென்று கொண்டிருக்கிறது. தம்புள்ளையிலிருந்து கொழும்பு வரையான இந்தப் பயணம், கடந்து வந்த தூரத்தை விடவும், இடம்பெற்ற சந்திப்புகளைப் பற்றி அதிகமாகக் கவனத்தைப் பெற்றுள்ளது. உடல் மற்றும் நம்பிக்கைக்கு இடையே, கொடுத்தல் மற்றும் பெறுதலுக்கும் இடையே, காண்பது மற்றும் ஆழமாக உணரப்படுவது ஆகியவற்றிற்கும் இடையே உள்ள பிணைப்பு இதன் ஊடாக உருவாக்கப்படுகிறது. ஐந்தாவது நாளாகும் போது, பயணிப்பவர்களின் உடல் மூலம் பேசத் தொடங்குகிறது. கொப்புளங்கள் நிறைந்த, வெடிப்புற்ற அந்தத் தேரர்களின் பாதங்கள், பக்தியினதும் நீண்ட தூரப் பயணத்தினதும் சுமையைத் தாங்கி நிற்கின்றன.
 
ஆரவாரத்தோடு வெளியேறிய தருணத்தில், ஒருவர் தாமாக முன்வந்து காயத்தை ஆற்றுவதற்காக மண்டியிடுகிறார். இது பயணத்திற்கு ஏற்பட்ட தடையல்ல – இதுவேதான் பயணம்.
 
கவனிப்பு என்பது வீதியின் ஒரு பகுதியாக மாறுகிறது. சகிப்புத்தன்மை தனிமனிதனுக்குரியது அன்றி, அது மற்றவர்களால் உறுதிப்படுத்தப்படுவதையும் இது வெளிப்படுத்துகிறது. முன்னோக்கிச் செல்கிறது. இது பல நூற்றாண்டுகால பழமையான அதிர்வை நினைவூட்டும் தியான நிலை இயல்பைப் பெறுகிறது.

Related Articles