யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் , வெளியீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளை அரசாங்க தகவல் திணைக்களத்தின் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச் . எஸ். கே. ஜே. பண்டார நேற்று (17) மற்றும் இன்று (18) ஆகிய இரு தினங்களில் சந்தித்தார்.
இதன்போது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பயிற்சி தேவைப்பாடு , நலன்வசதி உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
ஊடக அமைச்சு, அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் வட மாகாண ஊடகவியலாளர்கள் , ஊடக நிறுவனங்களிடையே தொடர்புகளை ஒழுங்குபடுத்துவதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கவனத்திற்கொள்ளப்பட்டது.
அடுத்த மாதம் தொடக்கம் வட மாகாண ஊடகவியலாளர்களின் நலன்புரி மற்றும் பயிற்சி செயலமர்வு தொடர்பில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க அரசாங்க தகவல் திணைக்களம் நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளது.
அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு வடமாகாண ஊடகவியலாளர்களோடு நெருங்கிய தொடர்பை முறைப்படுத்த அரசாங்க தகவல் திணைக்களம் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் அவதானத்தில் கொள்ளப்பட்டது.
வடமாகாண ஊடகவியலாளர்களது சேவை இயல்பினடிப்படையில் ஊடக செயற்பாட்டை உயர்நோக்கு தொழில் முயற்சி கொண்டதாக மாற்றியமைப்பதற்குத் தேவையான சாதக நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்க தகவல் திணைக்களம் எதிர்பார்ப்பதாகவும் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் இன்று (18) கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.