யானை பராமரிப்பு நிலையத்தில் தஞ்சமடைந்த 06 யானைகள் உடவளவை யானைகள் சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டன.

யானை பராமரிப்பு நிலையத்தில் தஞ்சமடைந்த 06 யானைகள் உடவளவை யானைகள் சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டன.
  • :

உடவளவ யானைகள் பராமரிப்பு நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 06 யானைகளை உடவளவ சரணாலயத்திற்கு விடுவிக்கும் பணி நேற்று (17) சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி தலைமையில் நடைபெற்றது.

தாயின் அன்பை இழந்து சுமார் 05 ஆண்டுகளாக உடவளவ யானைகள் பராமரிப்பு நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 06 யானைகள் இவ்வாறு உடவளவை சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு அமைப்புகள் மற்றும் விலங்கியல் அமைப்புகள் இந்த யானைகளின் பராமரிப்பிற்கு பங்களித்தன, இது யானைகள் பராமரிப்பு நிலையத்தில் பராமரிக்கப்பட்டு விடுவிக்கப்படும் 26 வது குழுவாகும்.

சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி, நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் கித்சிரி மற்றும் வவனசீவராசிகள் பாதுகாப்புத் தணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

Related Articles