"தமக்கென்று இடம் - அழகான வாழ்க்கை" என்ற கருப்பொருளின் கீழ் நாடு முழுவதும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய திட்டத்தின் கீழ், குருநாகல் மாவட்டத்தில் 307 குறைந்த வருமானம் பெறும் பயனாளி குடும்பங்களுக்கு வீட்டு உதவிக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு குருநாகல் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஒவ்வொரு வீட்டையும் நிர்மாணிப்பதற்காக ரூ. 1 மில்லியன் வழங்கப்படும்.
இந்த திட்டம் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபை ஊடாக செயல்படுத்தப்படுகிறது.


