உள்ளூர் அதிகார சபைகளுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கு மூன்றாவது நாளாகவும் இன்று (28) சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மற்றும் 25 திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றும், வாக்களிக்க முடியாது போன அரச உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு தபால் மூலம் வாக்களிப்பதற்கு இன்றும் (28) மற்றும் நாளையும் (29) சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தபால் மூல வாக்களிப்பிற்கு வழங்கப்பட்டுள்ள காலம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது என்றும் தேர்தல் ஆணைக்குழு மேலும் அறிவித்துள்ளது.