2025 சிறு போகத்திற்காக அம்பாறை மாவட்டத்தில் தற்போது இலக்கு வைக்கப்பட்ட 67,504 ஹெக்டயர் நிலத்தில் விவசாயம் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அதன்படி தற்போது போகக் கலந்துரையாடல் ஊடாக தீர்மானிக்கப்பட்டதாக காலப்பகுதிக்கு அமைவாக விவசாயிகளின் அடிப்படை நிலத் தயாரிப்பு மற்றும் பண்படுத்துதல் விதைப்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், அம்பாறை மாவட்ட பிரதி கமநல சேவைகள் ஆணையாளர் எல். ஜி. சாமினி சோமதாச தெரிவித்தார்.
2025 சிறுபோகத்தில் நெல் விவசாயம் செய்யப்படும் ஒரு ஹெக்டயர் நிலத்திற்கு 25,000 ரூபா வீதம் கூடியது இரண்டு ஹெக்டயர்களுக்காக வயல் நிலத்தில் செய்கை பண்ணப்படும் ஏனைய பயிர்களுக்காகவும் ஒரு ஹெக்டயருக்கு 150,000 ரூபா வீதம் ஆகக்கூடியது இரண்டு ஹெக்டயர்களுக்காக நிதி உதவி வழங்குவதற்கு தயார் செய்யப்பட்டுள்ளதாக பிரதி கமநல சேவைகள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.
அதன்படி தற்போது அம்பாறை மாவட்டத்தில் 15,550 விவசாயிகளுக்கான மானியம் அவர்களின் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் பெறுமதி செய்கை பண்ணப்படும் நில அளவிற்கு இணங்க ஹெக்டயர் 12,541 என்பதுடன், எதிர்பார்க்கப்படும் இலக்கிற்கு இணங்க இது 18.6% சதவீதமாகும்.
தரவுக் கட்டமைப்புக்கு உள்வாங்கப்பட்டுள்ள தரவுகளுக்கு அமைவாக 17ஆம் திகதியில் இருந்து இந்த விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.