மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன மேற்பார்வையின் கீழ் நிதியியல், சட்ட விரோதமான நிதிப் பரிவர்த்தனை மற்றும் பிரமிட் முறை போன்றன தொடர்பாக அரசாங்க ஊழியர்களுக்கு தெளிவு படுத்தும் நிகழ்வு நேற்று (16) மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியினால் வளப் பங்களிப்பு வழங்கப்பட்டதாக மாத்தறை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


